நம் ஊருக்கு என் இரண்டு பெயர்?
முதலில் பண்பு பெயர்கள் எப்படி இணையும் என பாப்போம்
செம்மை + ஊர்
“ஈறு போதல்” என்ற விதிப்படி ( நன்னூல் 136)
இறுதியில் உள்ள “மை ‘ என்ற எழுத்து அழிந்து
செம் + ஊர் என்று மாறுகிறது
இப்பொழுது “ஆதி நீடல் ” என்ற விதிப்படி (நன்னூல் 136)
முதலில் உள்ள செ (ச் + எ ) ஆனது சே ( ச் +ஏ ) ஆக மாறுகிறது
சேம் + ஊர்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீரு ஒப்பவும் “ ( நன்னூல் 219) என்ற விதிப்படி
இறுதியில் உள்ள மகர ஒற்று ( ம் என்ற எழுத்து) அழிந்து
சே (ச்+ஏ) என்ற எழுத்தில் உள்ள ‘ஏ’ என்ற உயிர் எழுத்து
இறுதி எழுத்தாக இருக்கும் படி மாறுகிறது
சே + ஊர்
ஒரு உயிர் எழுத்து மேல் மற்றொரு உயிர் எழுத்து சேராது எனவே ஒரு மெய் எழுத்து அவற்றிற்கு இடையில் வரும்
முதல் வார்த்தையின் இறுதியில் உள்ள உயிர் எழுத்து ‘இ’ அல்லது “ஈ “ அல்லது ‘ஐ’ ஆக இருப்பின் ய் என்ற மெய் எழுத்தும்
இம்மூன்று எழுத்து தவிர்த்து பிற உயிர் எழுத்துக்கள் இருந்தால் வ் என்ற மெய் எழுத்தும் வரும்
அனால் இறுதியில் உள்ள உயிர் எழுத்த்து ‘ஏ’ எனில், 'ய்' மற்றும் 'வ்' இரண்டுமே வரும்
ஏ முன் இருமையும் (நன்னூல் 162) என்ற விதிப்படி
சே + வ் + ஊர் = சேவூர் ஆகவும்
சே + ய் + ஊர் = சேயூர் ஆகவும் வரும்
எனவே தான் நம் ஊருக்கு இரண்டு பெயர்கள்
நம் ஊரை செம்மை யான ஊர், அதாவது சிவப்பு நிற மண் நிறைந்த ஊர் என பொருள் கொள்ளலாம் அல்லது வளம் நிறைந்த ஊர் எனவும் பொருள் கொள்ளலாம்
நூற்பா: 136
ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல்
தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
இனமிக லினையவும் பண்பிற் கியல்பே.
நூற்பா: 162
இஈ ஐவழி யவ்வு மேனை
யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.
நூற்பா: 219
மவ்வீ றொற்றொழிந்துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும்.
முதலில் பண்பு பெயர்கள் எப்படி இணையும் என பாப்போம்
செம்மை + ஊர்
“ஈறு போதல்” என்ற விதிப்படி ( நன்னூல் 136)
இறுதியில் உள்ள “மை ‘ என்ற எழுத்து அழிந்து
செம் + ஊர் என்று மாறுகிறது
இப்பொழுது “ஆதி நீடல் ” என்ற விதிப்படி (நன்னூல் 136)
முதலில் உள்ள செ (ச் + எ ) ஆனது சே ( ச் +ஏ ) ஆக மாறுகிறது
சேம் + ஊர்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீரு ஒப்பவும் “ ( நன்னூல் 219) என்ற விதிப்படி
இறுதியில் உள்ள மகர ஒற்று ( ம் என்ற எழுத்து) அழிந்து
சே (ச்+ஏ) என்ற எழுத்தில் உள்ள ‘ஏ’ என்ற உயிர் எழுத்து
இறுதி எழுத்தாக இருக்கும் படி மாறுகிறது
சே + ஊர்
ஒரு உயிர் எழுத்து மேல் மற்றொரு உயிர் எழுத்து சேராது எனவே ஒரு மெய் எழுத்து அவற்றிற்கு இடையில் வரும்
முதல் வார்த்தையின் இறுதியில் உள்ள உயிர் எழுத்து ‘இ’ அல்லது “ஈ “ அல்லது ‘ஐ’ ஆக இருப்பின் ய் என்ற மெய் எழுத்தும்
இம்மூன்று எழுத்து தவிர்த்து பிற உயிர் எழுத்துக்கள் இருந்தால் வ் என்ற மெய் எழுத்தும் வரும்
அனால் இறுதியில் உள்ள உயிர் எழுத்த்து ‘ஏ’ எனில், 'ய்' மற்றும் 'வ்' இரண்டுமே வரும்
ஏ முன் இருமையும் (நன்னூல் 162) என்ற விதிப்படி
சே + வ் + ஊர் = சேவூர் ஆகவும்
சே + ய் + ஊர் = சேயூர் ஆகவும் வரும்
எனவே தான் நம் ஊருக்கு இரண்டு பெயர்கள்
நம் ஊரை செம்மை யான ஊர், அதாவது சிவப்பு நிற மண் நிறைந்த ஊர் என பொருள் கொள்ளலாம் அல்லது வளம் நிறைந்த ஊர் எனவும் பொருள் கொள்ளலாம்
நூற்பா: 136
ஈறு போதல் இடையுகர மிய்யாதல்
ஆதி நீட லடியகர மையாதல்
தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல்
இனமிக லினையவும் பண்பிற் கியல்பே.
நூற்பா: 162
இஈ ஐவழி யவ்வு மேனை
யுயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்
உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.
நூற்பா: 219
மவ்வீ றொற்றொழிந்துயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும்.